மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
அமைதிப்படை 2, கண்களும் கவி பாடுதே தற்போது உருவாகி வரும் பிஸ்தா, மணியார் குடும்பம் ஆகிய படங்களில் நடித்து வருபவர் மலையாள நடிகை மிருதுளா முரளி. தற்போது தெருநாய்கள் குறித்த பிரச்சனை சோசியல் மீடியாவில் பெரிய அளவில் பேசப்பட்டு வரும் நிலையில், அவற்றுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் மிருதுளா. சமீபத்தில் கேரள அரசு தெருவில் திரியும் வெறி பிடித்த நாய்களை கொல்வதற்கு அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருக்கும் செய்தி வெளியானது.
இதை கேள்விப்பட்டதும் கொந்தளித்துப்போன மிருதுளா முரளி, “பாலியல் பலாத்காரம், கொலை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் அனைவரையும் கொன்று விடுகிறோமா என்ன? அவர்களுக்கு ஜெயில் என்கிற ஒரு இடத்தை கொடுத்து பாதுகாக்க தானே செய்கிறோம். அதேபோன்று இந்த வாயில்லா பிராணிகளை எதற்காக கொல்ல வேண்டும்? அவைகளுக்கு என தனியாக ஒரு தங்குமிடத்தை ஒதுக்கி அவற்றை பராமரிப்பதை விட்டுவிட்டு, கொல்வதற்காக அனுமதி கேட்பது மனிதாபிமானமற்ற செயல்” என்று விமர்சித்துள்ளார். மிருதுளாவின் இந்த கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.