26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு |

தெலுங்கு திரையுலகின் சீனியர் நடிகர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சரும் நடிகர் பிரபாஸின் பெரியப்பாவுமான கிருஷ்ணம் ராஜு சமீபத்தில் காலமானார். இவருக்கு அரசியல் தலைவர்களும் மொழி பாகுபாடு இல்லாமல் அனைத்து திரையுலக பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்தனர். வெளி மாநிலங்களில் இருந்து மம்முட்டி உள்ளிட்ட பலபேர் அவருக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் கிருஷ்ணம் ராஜுவின் மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடியவில்லையே என்று தனது வருத்தத்தை சோசியல் மீடியா மூலமாக வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “ரிபெல் ஹீரோ கிருஷ்ணம் ராஜுவை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன். அவர் தன்னுடைய சொந்த குழந்தைகள் போலவே ஒவ்வொருவரையும் அக்கறை எடுத்து கவனிப்பார். அதுமட்டுமல்ல ஒரு தாயைப்போல தானே அருகில் இருந்து உணவு பரிமாறுவார். அந்த அன்பையும் கவனிப்பையும் நான் மிஸ் பண்ணுகிறேன். என்னுடைய துரதிர்ஷ்டம் நான் அவருடைய உடலுக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்த முடியாத தூரத்தில் படப்பிடிப்பில் இருந்தேன். அவருடைய அந்த பெருமை பிரபாஸ் மூலமாக எப்போதுமே உயிருடன் இருக்கும்” என்று கூறியுள்ளார் ராகவா லாரன்ஸ்.
ராகவா லாரன்ஸ் தெலுங்கில் பிசியாக இருந்த சமயத்தில் பிரபாஸை வைத்து ரிபெல் என்கிற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




