லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
தெலுங்கு திரையுலகின் சீனியர் நடிகர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சரும் நடிகர் பிரபாஸின் பெரியப்பாவுமான கிருஷ்ணம் ராஜு சமீபத்தில் காலமானார். இவருக்கு அரசியல் தலைவர்களும் மொழி பாகுபாடு இல்லாமல் அனைத்து திரையுலக பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்தனர். வெளி மாநிலங்களில் இருந்து மம்முட்டி உள்ளிட்ட பலபேர் அவருக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் கிருஷ்ணம் ராஜுவின் மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடியவில்லையே என்று தனது வருத்தத்தை சோசியல் மீடியா மூலமாக வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “ரிபெல் ஹீரோ கிருஷ்ணம் ராஜுவை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன். அவர் தன்னுடைய சொந்த குழந்தைகள் போலவே ஒவ்வொருவரையும் அக்கறை எடுத்து கவனிப்பார். அதுமட்டுமல்ல ஒரு தாயைப்போல தானே அருகில் இருந்து உணவு பரிமாறுவார். அந்த அன்பையும் கவனிப்பையும் நான் மிஸ் பண்ணுகிறேன். என்னுடைய துரதிர்ஷ்டம் நான் அவருடைய உடலுக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்த முடியாத தூரத்தில் படப்பிடிப்பில் இருந்தேன். அவருடைய அந்த பெருமை பிரபாஸ் மூலமாக எப்போதுமே உயிருடன் இருக்கும்” என்று கூறியுள்ளார் ராகவா லாரன்ஸ்.
ராகவா லாரன்ஸ் தெலுங்கில் பிசியாக இருந்த சமயத்தில் பிரபாஸை வைத்து ரிபெல் என்கிற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.