ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. | ஆடை வடிவமைப்பாளரை 2வது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ் | தயாரிப்பாளர் சங்கத்திலும் தலைவர் பதவிக்கு நடிகை போட்டி : பர்தா அணிந்து வந்து மனு தாக்கல் |
தமிழில் விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்து வரும் ராஷ்மிகா, ஹிந்தியில் குட்பை, மிஷன் மஜ்னு, அனிமல் என மூன்று படங்களில் நடித்து வருகிறார். இதில் அமிதாப்பச்சனுடன் இணைந்து நடித்துள்ள குட்பை படம் அடுத்த மாதம் 7ம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது அப்படத்தின் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் ராஷ்மிகா மந்தனா. அப்போது மீடியாக்களுக்கு அவர் அளித்த பேட்டியில் அல்லு அர்ஜுனுடன் நடிக்க இருக்கும் புஷ்பா- 2 படம் குறித்த ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.
அதில், அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடிக்கும் புஷ்பா- 2 படத்தின் வேலைகளை இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்க போகிறேன். எனது கேரியரில் ஒரு முக்கியமான படமாக புஷ்பா அமைந்தது. ஹிந்தி படங்களில் கமிட்டாகி நான் நடித்து வந்த நேரத்தில் இப்படம் ஹிந்தியிலும் வெளியாகி வசூல் சாதனை செய்தது. அதனால் ஹிந்தியில் நடிக்கும் படங்கள் வெளியாவதற்கு முன்பே புஷ்பா மூலம் ஹிந்தி ரசிகர்களுக்கு பரிட்சயமாகி விட்டேன். அதனால் புஷ்பா-2 படத்தில் நடிப்பதில் கூடுதல் ஆர்வமாக இருக்கிறேன். இந்த இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுனின் மனைவி ஸ்ரீவள்ளியாக நடிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா.