வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் |

மணிரத்னம் தனது கனவு படமான பொன்னியின் செல்வனை இரண்டு பாகங்களாக இயக்கி முடித்து விட்டார். இப்படத்தின் முதல் பாகம் 30ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள். இந்த நிலையில் நடிகை அமலாபால் அளித்த ஒரு பேட்டியில், பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதற்கு இரண்டு முறை வாய்ப்பு கிடைத்தும் தான் தவற விட்டு விட்டதாக தெரிவித்திருக்கிறார்.
அது குறித்து அவர் கூறுகையில், ‛‛பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதற்கு முதலில் என்னை அழைத்து ஆடிஷன் செய்தார்கள். ஆனால் அதையடுத்து படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. பின்னர் மீண்டும் அந்த படத்தை தொடங்கயிருந்தபோது எனக்கு அழைப்பு விடுத்தார் மணிரத்னம். ஆனால் பொன்னியின் செல்வன் படத்தில் அவர் எனக்கு கொடுத்த வேடத்தில் நடிப்பதற்கு மனதளவில் நான் தயாராக இல்லை. அதன் காரணமாக அந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ள அமலா பால், அந்த வேடத்தில் நடிக்காதது எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் அந்த வேடத்தில் நான் நடிக்காததற்கு சில காரணங்கள் உள்ளது என்றும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் அமலாபால் .




