சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
சிந்து சமவெளி, மைனா போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் அமலாபால். அதன் பிறகு விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். தலைவா படத்திற்கு பிறகு இயக்குனர் ஏ. எல் . விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டவர், சில ஆண்டுகளில் அவரை விவாகரத்து செய்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டில் தேசாய் என்பவரை மறுமணம் செய்து கொண்ட அமலாபாலுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு 'இலை' என்று பெயர் வைத்தார்.
மேலும் கணவர் தேசாய் மற்றும் மகனுடன் இணைந்து எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்ட்டாவில் வெளியிட்டு வரும் அமலா பால், தற்போது தனது மகன் இலையுடன் எடுத்துக்கொண்ட ஒரு க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதோடு ஒன்றாக வளர்கிறோம் என்ற ஒரு கேப்சனும் அவர் கொடுத்துள்ளார்.