டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

ராம்சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் ஆர்சி 15 படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ராம்சரணுடன் கியாரா அத்வானி , அஞ்சலி, சுனில், ஸ்ரீகாந்த் உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்து இருக்கிறார். நேற்று முதல் அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். மாநாடு படத்திற்கு பிறகு தமிழில் மார்க் ஆண்டனி உள்ளிட்ட சில படங்களில் வில்லனாக நடித்து வரும் எஸ். ஜே. சூர்யா, ஆர்.சி-15 படத்திலும் நெகட்டிவ் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதற்கு முன்பு விஜய் நடிப்பில் ஷங்கர் இயக்கிய நண்பன் படத்தில் ஒரு கேரக்டரில் எஸ். ஜே .சூர்யா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




