புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
ராம்சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் ஆர்சி 15 படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ராம்சரணுடன் கியாரா அத்வானி , அஞ்சலி, சுனில், ஸ்ரீகாந்த் உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்து இருக்கிறார். நேற்று முதல் அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். மாநாடு படத்திற்கு பிறகு தமிழில் மார்க் ஆண்டனி உள்ளிட்ட சில படங்களில் வில்லனாக நடித்து வரும் எஸ். ஜே. சூர்யா, ஆர்.சி-15 படத்திலும் நெகட்டிவ் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதற்கு முன்பு விஜய் நடிப்பில் ஷங்கர் இயக்கிய நண்பன் படத்தில் ஒரு கேரக்டரில் எஸ். ஜே .சூர்யா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.