திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
ராம்சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் ஆர்சி 15 படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ராம்சரணுடன் கியாரா அத்வானி , அஞ்சலி, சுனில், ஸ்ரீகாந்த் உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்து இருக்கிறார். நேற்று முதல் அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். மாநாடு படத்திற்கு பிறகு தமிழில் மார்க் ஆண்டனி உள்ளிட்ட சில படங்களில் வில்லனாக நடித்து வரும் எஸ். ஜே. சூர்யா, ஆர்.சி-15 படத்திலும் நெகட்டிவ் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதற்கு முன்பு விஜய் நடிப்பில் ஷங்கர் இயக்கிய நண்பன் படத்தில் ஒரு கேரக்டரில் எஸ். ஜே .சூர்யா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.