ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ் - ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்த படம் 3. அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமான இந்த படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலைவெறி என்ற பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்த படத்தின் முதல் பாதியில் இப்போது ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயன் தனுஷின் நண்பராக காமெடி வேடத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது தெலுங்கில் வாத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.
இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கும் நிலையில் தற்போது, 11 ஆண்டுகளுக்கு முன்பு தனுஷ், ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்த 3 படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிட்டுள்ளார்கள். அப்படி வெளியிடப்பட்ட இந்த படம் 200 காட்சிகளுக்கு மேல் ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படி தெலுங்கில் தான் நேரடியாக நடித்த வாத்தி படம் திரைக்கு வருவதற்கு முன்பே, 11 ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் தான் நடித்த திரைப்படத்திற்கு தெலுங்கு ரசிகர்களிலேயே வரவேற்பு ஏற்பட்டிருப்பது தனுஷுக்கு மட்டுமின்றி வாத்தி பட குழுவிற்கும் உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.