அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் | பிளாஷ்பேக்: தாமதத்தால் ஏற்பட்ட 4 பெரும் இழப்புகள் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'அடங்காதே' | ஹரிஹர வீரமல்லு : காட்சிகள் குறைப்பு |
ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ் - ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்த படம் 3. அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமான இந்த படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலைவெறி என்ற பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்த படத்தின் முதல் பாதியில் இப்போது ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயன் தனுஷின் நண்பராக காமெடி வேடத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது தெலுங்கில் வாத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.
இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கும் நிலையில் தற்போது, 11 ஆண்டுகளுக்கு முன்பு தனுஷ், ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்த 3 படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிட்டுள்ளார்கள். அப்படி வெளியிடப்பட்ட இந்த படம் 200 காட்சிகளுக்கு மேல் ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படி தெலுங்கில் தான் நேரடியாக நடித்த வாத்தி படம் திரைக்கு வருவதற்கு முன்பே, 11 ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் தான் நடித்த திரைப்படத்திற்கு தெலுங்கு ரசிகர்களிலேயே வரவேற்பு ஏற்பட்டிருப்பது தனுஷுக்கு மட்டுமின்றி வாத்தி பட குழுவிற்கும் உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.