26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு |

ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ் - ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்த படம் 3. அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமான இந்த படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலைவெறி என்ற பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்த படத்தின் முதல் பாதியில் இப்போது ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயன் தனுஷின் நண்பராக காமெடி வேடத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது தெலுங்கில் வாத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.
இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கும் நிலையில் தற்போது, 11 ஆண்டுகளுக்கு முன்பு தனுஷ், ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்த 3 படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிட்டுள்ளார்கள். அப்படி வெளியிடப்பட்ட இந்த படம் 200 காட்சிகளுக்கு மேல் ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படி தெலுங்கில் தான் நேரடியாக நடித்த வாத்தி படம் திரைக்கு வருவதற்கு முன்பே, 11 ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் தான் நடித்த திரைப்படத்திற்கு தெலுங்கு ரசிகர்களிலேயே வரவேற்பு ஏற்பட்டிருப்பது தனுஷுக்கு மட்டுமின்றி வாத்தி பட குழுவிற்கும் உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.




