நான் ஈ படத்தை இயக்கியது ஏன்? : மனம் திறந்த ராஜமவுலி | மோகன்லாலுக்கு இழைக்கப்பட்ட அநீதி : நடிகர் ரவீந்தர் கொதிப்பு | துல்கர் சல்மான் இல்லையென்றால் படத்தையே நிறுத்தி இருப்பேன் : ராணா டகுபதி | சவுபின் சாஹிர் கால்ஷீட் கிடைக்காததால் மாறிய பஹத் பாசில் கதாபாத்திரம் | தினமும் அதிகாலை 3 மணிக்கு திரிஷ்யம் கிளைமாக்ஸை எழுதினேன் : ஜீத்து ஜோசப் | நரேன் கார்த்திகேயன் பற்றிய பயோபிக் சினிமாவாகிறது | 'பராசக்தி' வெளியீடு தள்ளிப் போகவே வாய்ப்பு ? | ஹாலிவுட்டில் நடித்த முதல் இந்திய நடிகரின் வாழ்க்கை சினிமா ஆகிறது | தெலுங்கு காமெடி நடிகர் பிஷ் வெங்கட் காலமானார் | ரேக்ளா ரேஸ் பின்னணியில் உருவாகும் 'சோழநாட்டான்' |
மாணிக்கம், அலெக்சாண்டர், உல்லாசம், பிசாசு- 2 உள்பட பல படங்களுக்கு இசையமைத்தவர் கார்த்திக் ராஜா. இளையராஜாவின் மூத்த மகனான இவர் அடுத்த மாதம் 24ம் தேதி திருச்சியில் ‛பொன்மாலைப் பொழுது' என்ற பெயரில் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளதாக அறிவித்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த பொன் மாலை பொழுது நிகழ்ச்சியில் இளையராஜா மற்றும் என்னுடைய இசையில் உருவையான பாடல்கள் மட்டுமே பாடப்படும். ராயல்டி பிரச்னைகள் இருப்பதால் யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் இடம்பெறாது என்று தெரிவித்திருக்கிறார். மேலும், இந்த நிகழ்ச்சியில் ஹரிஹரன், சாதனா சர்க்கம் ஆகியோர் பங்கேற்றாலும் ஹிந்தி பாடல்கள் கண்டிப்பாக இடம் பெறாது. தமிழ் பாடல்கள் மட்டுமே முழுக்க முழுக்க இடம்பெறும் என்று தெரிவித்திருக்கும் கார்த்திக் ராஜா, இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் வாத்திய கலைஞர்கள் அனைவருமே தமிழகத்தைச் சார்ந்தவர்கள் என்றும் அவர் அறிவித்திருக்கிறார்.