விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா | 'குபேரா' படத்திற்கு அழுத்தம் கொடுத்த ஓடிடி நிறுவனம் | ராஜமவுலி, மகேஷ்பாபு பட வாய்ப்பைத் தவிர்த்த விக்ரம்? | சாந்தனு ஜோடியாக அஞ்சலி நாயர் | 'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் |
இந்தியன் -2 படத்தை அடுத்து தற்போது ராம்சரண் நடிப்பில் 'கேம் சேஞ்சர்' என்ற படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். இந்த படத்தை அடுத்து சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி என்ற நாவலை மையமாக வைத்து தனது அடுத்த படத்தை இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளார் ஷங்கர். அதற்கான உரிமையை வாங்கி வைத்திருக்கிறார். ஆனால் இந்த நேரத்தில் அந்த நாவலின் காட்சிகளை தழுவி சில படங்களில் காட்சிகள் இடம் பெற்று வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதன் காரணமாகவே தனது சோசியல் மீடியாவில் அவர் ஒரு எச்சரிக்கை செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ''சு.வெங்கடேசன் அவர்களின் புகழ்பெற்ற தமிழ் நாவல் 'நவயுக நாயகன் வேள் பாரி'யின் பதிப்புரிமையை பெற்றுள்ளேன். ஆனால் இந்த நாவலின் முக்கிய காட்சிகள் அனுமதி இல்லாமல் சில படங்களில் பயன்படுத்தப்படுவதை பார்த்து வருத்தமாக உள்ளது. சமீபத்தில் வெளியான ஒரு திரைப்படத்தின் டிரைலரில் வேள்பாரி நாவலின் முக்கியமான காட்சிகள் திருடப்பட்டு பயன்படுத்தப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.
தயவு செய்து இந்த நாவலின் காட்சிகளை திரைப்படங்கள், வெப் சீரிஸ் மற்றும் எந்த ஒரு ஊடகத்திலும் பயன்படுத்த வேண்டாம். படைப்பாளிகளின் உரிமையை மதியுங்கள். அனுமதியின்றி காட்சிகளை தழுவி எடுக்க வேண்டாம். அப்படி யாராவது எடுத்தால் சட்டப்படி நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி வரும்,'' என்று இயக்குனர் ஷங்கர் அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார்.