இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
யுவன் சங்கர் ராஜா திரைப்பட இசை அமைப்பாளராகி 25 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து, அதை கொண்டாடும் வகையில் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். முதல் இசை நிகழ்ச்சி மலேசிய தலைநகர் கோலாம்பூரில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய 45 நிமிடங்களில் விற்றது சாதனை அளவாக இருக்கிறது.
இதை தொடர்ந்து அடுத்த மாதம் (செப்டம்பர்) 10ம் தேதி ‛யு அண்ட் ஐ' என்ற தலைப்பில் யுவன் இசை நிகழ்ச்சி நடத்துகிறார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. 11 வருடங்களுக்கு பிறகு யுவனின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடக்க இருப்பதால் அதற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இசை அமைப்பாளர்கள் இளையராஜாவும், ஏ.ஆர்.ரகுமானும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது.