ரவிதேஜாவின் 76வது படம் ரிலீஸ் தேதியுடன் அறிவிப்பு | நடிகர் விநாயகனின் விமர்சனத்திற்கு நடிகர் சலீம் குமாரின் மகன் பதில் | தனுஷ் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கிர்த்தி சனோன் | புதிய ஆரம்பம் - நடிகர் கிருஷ்ணா இரண்டாவது திருமணம் | பிரித்விராஜ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் ; ஜோஜூ ஜார்ஜ் | மகளுக்கு டைட்டில் கார்டில் இடம் கொடுத்த மணிரத்னம் ; நன்றி சொன்ன குஷ்பு | 'கல்கி 2' படத்திலிருந்தும் தீபிகா படுகோனே விலகல்? | இந்தியன் 2 படத்தை விட குறைவாக வசூலித்த தக் லைப் | மீண்டும் தள்ளிப் போகும் 'ஹரிஹர வீர மல்லு' | சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? |
தெலுங்கு முன்னணி நடிகரான சர்வானந்த், தமிழில் காதல்னா சும்மா இல்ல, நாளை நமதே படங்களில் நடித்திருந்தாலும் எங்கேயும் எப்போதும் படம்தான் அவரை திரும்பி பார்க்க வைத்தது. கடைசியாக ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை படத்தில் நடித்தார். தற்போது 10 வருடங்களுக்கு பிறகு கணம் படத்தின் மூலம் தமிழுக்கு மீண்டும் வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: நிறைய ஆசைகளோடுதான் தமிழ் சினிமாவுக்கு வந்தேன். ஆனால் நான் எதிர்பார்த்தது நடக்கவில்லை. கடைசியாக நடித்த ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை படத்தை சேரன் இயக்கினார். மிகுந்த எதிர்பார்ப்புடன் அந்த படத்தை நம்பினேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த படம் தியேட்டரில் வெளியாகவில்லை. அதனால் அது மக்களை சென்று சேரவில்லை. இதனால் அடுத்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதன்பிறகு நானும் தெலுங்கில் பிசியாகி விட்டேன்.என்றாலும் தமிழ் படங்களை தொடர்ந்து பார்த்து வந்தேன்.
தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு எனது நெருங்கிய நண்பர் மீண்டும் தமிழ்படத்தில் நடிக்க வேண்டும் என்று என்னை விட அவர்தான் அதிக ஆர்வமாக இருந்தார். நிறைய கதைகளை எனக்கு அனுப்பினார். தமிழில் மீண்டும் நடித்தால் நல்ல படத்தில்தான் நடிக்க வேண்டும் என்கிற முடிவோடு இந்தேன். அப்படியொரு கதையாக கணம் படம் அமைந்ததால் நடிக்க சம்மதித்தேன்.
தெலுங்கில் நான் ஆக்ஷன் ஹீரோவாக பெயர் எடுத்திருந்தாலும் புதிய முயற்சிக்கு ஆதரவு தரவேண்டும் என்பதற்காக அம்மா சென்டிமென்டை மையமாக கொண்ட இந்த படத்தில் நடிக்கிறேன். இந்த படம் தமிழ் மக்களுக்கு பிடிக்கும், தொடர்ந்து தமிழில் நடிப்பேன் என்று நம்புகிறேன். என்றார் சர்வானந்த்.