படத்தின் பட்ஜெட் தொகையை இசை உரிமை விற்றதில் திரும்பப் பெற்ற 'சாயரா' | பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன கங்கனா ரணாவத் | பிளாஷ்பேக்: ஈர்ப்புள்ள பாரதியாரின் பாடல்களும், இணையற்ற ஏ வி எம்மின் “நாம் இருவர்” திரைப்படமும் | கமலை சந்தித்த 'உசுரே' படக்குழுவினர்: பிக்பாஸ் பாசத்தில் ஜனனி ஏற்பாடு | 'மிஸ்டர் ஜூ கீப்பர், அடங்காதே' இந்தமுறையாவது சொன்னபடி வெளியாகுமா? | வடிவேலுக்கு இந்த நிலையா?: மாரீசன் காட்சிகள் ரத்தான பரிதாபம் | திருமணம் எப்போது? விஜய்தேவரகொண்டா பதில் இதுதான் | சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் |
நடிகர் மாதவன் இயக்கம், நடிப்பில் பான் இந்தியா படமாக வெளிவந்த படம் 'ராக்கெட்ரி'. இந்திய விண்வெளித் துறையின் முன்னாள் விஞ்ஞானியான நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக அந்தப் படம் வெளிவந்தது.
அந்தப் படத்தைப் பற்றி சமூக வலைத்தளத்தில் ஒருவர், “'ராக்கெட்ரி' படத்திற்கு பைனான்ஸ் செய்ததால் மாதவன் தன்னுடைய வீட்டை இழந்தார். அதே சமயம் அவரது மகன் வேதாந்த் நாட்டிற்காக நீச்சலில் பதக்கங்களைப் பெறுகிறார்,” எனக் குறிப்பிட்டிருந்தார். அந்தப் பதிவை வேறொரு ரசிகர்கள் மாதவனுக்கு டேக் செய்திருந்தார்.
அதற்கு பதிலளித்துள்ள மாதவன், “என் தியாகத்திற்கு தயவு செய்து அதிகமாக ஆதரவளிக்காதீர்கள். நான் எனது வீட்டையோ வேறு எதையுமோ இழக்கவில்லை. உண்மையில் 'ராக்கெட்ரி' சம்பந்தப்பட்டவர்கள் இந்த ஆண்டு அதிகமான வருமான வரியைப் பெருமையுடன் செலுத்த உள்ளார்கள். கடவுளின் அருளால், நாங்கள் அனைவருமே மிகச் சிறப்பான மற்றும் பெருமையான லாபத்தை ஈட்டியுள்ளோம். நான் இன்னும் எனது வீட்டில்தான் நேசத்துடன் வசிக்கிறேன்,” என 'ராக்கெட்ரி' பற்றி சந்தேகங்கள் அனைத்திற்கும் சேர்த்து பதிலளித்துள்ளார்.