டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் நாசர். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கானாவில் போலீஸ் அகாடமியில் படப்பிடிப்பு ஒன்றில் பங்கேற்று இருந்தார் நாசர். அப்போது எதிர்பாராத விதமாக படப்பிடிப்பின் போது அவர் காயமடைந்தார். இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த படப்பிடிப்பின் போது நடிகை சுஹாசினி, நாயகி மெஹ்ரீன், நடிகர் சியாஜி ஷிண்டே ஆகியோரும் உடன் இருந்தார். நாசர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாசர் தற்போது நலமுடன் இருப்பதாக அவரது மனைவி கமீலா தெரிவித்துள்ளார்.




