புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'பெங்களூர் டேய்ஸ்' படத்தை இயக்கியவர் அஞ்சலி மேனன். அந்த படத்தை தொடர்ந்து கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு பிரித்விராஜ், பார்வதி, நஸ்ரியா ஆகியோரை வைத்து 'கூடே' என்கிற படத்தை இயக்கினார் அஞ்சலி மேனன். முந்தைய படத்தைப்போல இந்த படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தனது அடுத்த படத்தை இயக்குவதற்கு தயாராகி வருகிறார் அஞ்சலி மேனன். இந்தநிலையில் இந்த படத்தில் தான் நடிக்க இருப்பதாக ஒரு பேட்டியில் நடிகை நித்யா மேனன் கூறியுள்ளார்
இதற்கு முன்னதாக அஞ்சலி மேனன் கதை எழுதி, அன்வர் ரஷீத் இயக்கி மிகப்பெரிய வெற்றி பெற்ற உஸ்தாத் ஹோட்டல் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் நித்யா மேனன். அப்போதிருந்தே இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். அதைத்தொடர்ந்து அஞ்சலி மேனன் இயக்கிய பெங்களூர் டேய்ஸ் படத்திலும் கொஞ்ச நேரமே வந்து போகும் கதாபாத்திரத்தில் ஜோடியாக நட்புக்காக நடித்திருந்தார் நித்யா மேனன். இந்த நிலையில் தான், அஞ்சலி மேனனின் படத்தில் தான் மீண்டும் கதாநாயகியாக நடிப்பது உறுதிப்படுத்தி உள்ளார் நித்யா மேனன்.