பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'பெங்களூர் டேய்ஸ்' படத்தை இயக்கியவர் அஞ்சலி மேனன். அந்த படத்தை தொடர்ந்து கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு பிரித்விராஜ், பார்வதி, நஸ்ரியா ஆகியோரை வைத்து 'கூடே' என்கிற படத்தை இயக்கினார் அஞ்சலி மேனன். முந்தைய படத்தைப்போல இந்த படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தனது அடுத்த படத்தை இயக்குவதற்கு தயாராகி வருகிறார் அஞ்சலி மேனன். இந்தநிலையில் இந்த படத்தில் தான் நடிக்க இருப்பதாக ஒரு பேட்டியில் நடிகை நித்யா மேனன் கூறியுள்ளார்
இதற்கு முன்னதாக அஞ்சலி மேனன் கதை எழுதி, அன்வர் ரஷீத் இயக்கி மிகப்பெரிய வெற்றி பெற்ற உஸ்தாத் ஹோட்டல் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் நித்யா மேனன். அப்போதிருந்தே இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். அதைத்தொடர்ந்து அஞ்சலி மேனன் இயக்கிய பெங்களூர் டேய்ஸ் படத்திலும் கொஞ்ச நேரமே வந்து போகும் கதாபாத்திரத்தில் ஜோடியாக நட்புக்காக நடித்திருந்தார் நித்யா மேனன். இந்த நிலையில் தான், அஞ்சலி மேனனின் படத்தில் தான் மீண்டும் கதாநாயகியாக நடிப்பது உறுதிப்படுத்தி உள்ளார் நித்யா மேனன்.