டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

ஒரு காலத்தில் பாலிவுட் படங்கள் மட்டுமே பல நூறு கோடிகளை வசூலித்து முதலிடத்தை பெற்று வந்தன. இந்தநிலையில் சமீபகாலமாக ஹிந்தியில் வெளியாகி வரும் படங்கள் மிக மோசமான தோல்வியை தழுவி வருகின்றன. குறிப்பாக நடிகர் அக்ஷய் குமார் படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வருகின்றன. அதேசமயம் தென்னிந்தியாவில் தயாராகி ஹிந்தியில் வெளியான புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎப் ஆகிய படங்கள் அங்கே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலிலும் சாதித்து காட்டின.
இதனால் பாலிவுட் திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. ரசிகர்களின் மனநிலை வேறுவிதமாக மாறி உள்ளதோ என்பது பற்றி ஆராயாமல் வழக்கமான பாணியிலேயே படங்களை அவர்கள் உருவாக்கி வருகின்றனர். இந்தநிலையில் பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப் ஹிந்தி படங்களின் தோல்விகளுக்கு சப்பைக்கட்டு கட்டும் விதமாக காரணம் ஒன்றை கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “மக்களிடம் தற்போது பாக்கெட்டில் பணம் இல்லை.. ஒரு படத்தை பார்ப்பதற்கு செலவு செய்ய வேண்டுமென்றால் அந்த படத்தை பற்றி நன்கு உறுதி செய்து கொண்ட பின்னரே தியேட்டருக்கு செல்ல விரும்புகிறார்கள்.. அப்படி இல்லை என்றால் கேஜிஎப், பாகுபலி போன்ற எதிர்பார்ப்பு கொண்ட இயக்குனர்களின் படங்களுக்கு மட்டுமே செல்ல விரும்புகிறார்கள்.. இப்போது அவர்கள் சினிமா, கிரிக்கெட் ஆகியவற்றை மறந்து விட்டு நாட்டில் நிலவும் பொருளாதார பற்றாக்குறை குறித்து தான் பேசி வருகிறார்கள்” என்று அறிவார்ந்த விதமாக ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.




