பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
தமிழ், தெலுங்குத் திரையுலகங்களில் கவர்ச்சிக்கன்னியாக விளங்கியவர் சில்க் ஸ்மிதா. 80களில் அவருடைய கவர்ச்சி ஆட்டம் இல்லாத படங்களைப் பார்ப்பதே அரிது. 1996ம் ஆண்டு தனது 35வது வயதில் திடீரென தற்கொலை செய்து கொண்டார். அவருக்குப் பின் அனுராதா, டிஸ்கோ சாந்தி என கவர்ச்சி நடன நடிகைகள் பலர் வந்தாலும் சில்க் ஸ்மிதா அளவுக்கு அவர்கள் பிரபலம் ஆகவில்லை என்பது உண்மை.
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 2011ம் ஆண்டில் அவரது கதாபாத்திரத்தில் வித்யா பாலன் நடிக்க 'த டர்ட்டி பிக்சர்' என்ற படம் வெளியாகி வரவேற்பையும், வசூலையும் பெற்றது. அப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக வித்யா பாலனுக்கு சிறந்த நடிகைகக்கான தேசிய விருதும் கிடைத்தது.
அப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஆரம்பிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான கதை எழுதும் வேலைகளை கனிகா தில்லான் தற்போது செய்து வருகிறாராம். சில்க்ஸ் ஸ்மிதாவின் இளமைக் கால வாழ்க்கை இரண்டாம் பாகத்தில் இடம் பெறும் எனத் தெரிகிறது. இரண்டாம் பாகத்தில் மீண்டும் வித்யா பாலனே நடிப்பாரா அல்லது வேறு நடிகை நடிப்பாரா என்பது விரைவில் தெரிய வரும்.