தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழ், தெலுங்குத் திரையுலகங்களில் கவர்ச்சிக்கன்னியாக விளங்கியவர் சில்க் ஸ்மிதா. 80களில் அவருடைய கவர்ச்சி ஆட்டம் இல்லாத படங்களைப் பார்ப்பதே அரிது. 1996ம் ஆண்டு தனது 35வது வயதில் திடீரென தற்கொலை செய்து கொண்டார். அவருக்குப் பின் அனுராதா, டிஸ்கோ சாந்தி என கவர்ச்சி நடன நடிகைகள் பலர் வந்தாலும் சில்க் ஸ்மிதா அளவுக்கு அவர்கள் பிரபலம் ஆகவில்லை என்பது உண்மை.
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 2011ம் ஆண்டில் அவரது கதாபாத்திரத்தில் வித்யா பாலன் நடிக்க 'த டர்ட்டி பிக்சர்' என்ற படம் வெளியாகி வரவேற்பையும், வசூலையும் பெற்றது. அப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக வித்யா பாலனுக்கு சிறந்த நடிகைகக்கான தேசிய விருதும் கிடைத்தது.
அப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஆரம்பிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான கதை எழுதும் வேலைகளை கனிகா தில்லான் தற்போது செய்து வருகிறாராம். சில்க்ஸ் ஸ்மிதாவின் இளமைக் கால வாழ்க்கை இரண்டாம் பாகத்தில் இடம் பெறும் எனத் தெரிகிறது. இரண்டாம் பாகத்தில் மீண்டும் வித்யா பாலனே நடிப்பாரா அல்லது வேறு நடிகை நடிப்பாரா என்பது விரைவில் தெரிய வரும்.