மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
புகழ்பெற்ற இந்துக்களின் புனித ஸ்தலமான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவில் முன்பு கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட ஈ.வே.ராமசாமியின் சிலை வைக்கப்பட்டுள்ளது. பக்தியுடன் சாமி கும்பிட்டு வெளியே வரும்போது கடவுள் இல்லை, கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்கிற வாசகத்தை படிக்க வேண்டிய நிலை இருக்கிறது. இதை மாற்ற வேண்டும் என்கிற குரல் நெடுநாளாக ஒலித்து வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் கோவில் முன் உள்ள ஈ.வே.ராமசாமி சிலையை அகற்ற வேண்டும் என்றார். அவரது இந்த கருத்துக்கு வரவேற்பும், எதிர்ப்பும் இருந்து வருகிறது.
இதுகுறித்து நடிகை கஸ்தூரி பதிவிட்டிருப்பதாவது: உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள். மசூதி முன்போ சர்ச் பக்கத்திலோ எங்கேனும் பெரியார் சிலையோ கடவுள் இல்லை என்ற வாசகமோ பார்த்ததுண்டா? அரசியல் தலைவர்களின் மாடமாளிகைகள், நிறுவனங்கள், பள்ளிகளில் உள்ளேயோ வெளியேயோ பெரியார் சிலை உண்டா? கடவுள் சிலை பார்த்திருக்கிறேன். என்று எழுதியிருக்கிறார். கஸ்தூரியின் கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் நிலவி வருகிறது.