ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் | டியூட் படத்தில் சிவகார்த்திகேயனா? வைரலாகும் வீடியோ | கூலி படத்தில் கமலா... : லோகேஷ் கனகராஜ் அளித்த பதில் | தற்கொலைக்கு முயற்சித்தாரா ‛டிக் டாக்' இலக்கியா... : ஸ்டன்ட் இயக்குனர் மீது குற்றச்சாட்டு | மீண்டும் இசையில் கவனம் செலுத்தப் போகிறேன்: விஜய் ஆண்டனி | மீண்டும் ‛அந்த 7 நாட்கள்' படத்தில் நடிக்கும் கே.பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஒரே தமிழ் படத்தில் நடித்த வங்காள நடிகர் |
தெலுங்கு, தமிழில் விஜய் நடித்து வரும் வாரிசு மற்றும் ஷங்கர் இயக்கி வரும் ராம்சரண் -15 ஆகிய படங்களை தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிலையில் இந்த படங்களில் நடிப்பதற்காக அறிமுக நடிகர் - நடிகை தேர்வு நடந்து வருவதாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி பரவியது. அதை பார்த்துவிட்டு புதுமுக நடிகர் நடிகைகள் பலரும் விண்ணப்பித்து வருகிறார்கள். இதையடுத்து அந்த நிறுவனம் தற்போது ஒரு அவசர அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தற்போது எங்கள் நிறுவனம் தயாரித்து வரும் ஆர்.சி-15, எஸ்விசி- 50 படங்களுக்கு அறிமுக நடிகர்களை தேர்வு செய்யவில்லை. இது குறித்து வெளியாகி உள்ள அனைத்து செய்திகளும் முழுக்க முழுக்க வதந்தியே. அதனால் யாரும் சோசியல் மீடியாவில் வெளியான இந்த செய்தியை நம்பி ஏமாற வேண்டாம் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.