கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
தெலுங்கு, தமிழில் விஜய் நடித்து வரும் வாரிசு மற்றும் ஷங்கர் இயக்கி வரும் ராம்சரண் -15 ஆகிய படங்களை தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிலையில் இந்த படங்களில் நடிப்பதற்காக அறிமுக நடிகர் - நடிகை தேர்வு நடந்து வருவதாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி பரவியது. அதை பார்த்துவிட்டு புதுமுக நடிகர் நடிகைகள் பலரும் விண்ணப்பித்து வருகிறார்கள். இதையடுத்து அந்த நிறுவனம் தற்போது ஒரு அவசர அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தற்போது எங்கள் நிறுவனம் தயாரித்து வரும் ஆர்.சி-15, எஸ்விசி- 50 படங்களுக்கு அறிமுக நடிகர்களை தேர்வு செய்யவில்லை. இது குறித்து வெளியாகி உள்ள அனைத்து செய்திகளும் முழுக்க முழுக்க வதந்தியே. அதனால் யாரும் சோசியல் மீடியாவில் வெளியான இந்த செய்தியை நம்பி ஏமாற வேண்டாம் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.