பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை |

தெலுங்கு, தமிழில் விஜய் நடித்து வரும் வாரிசு மற்றும் ஷங்கர் இயக்கி வரும் ராம்சரண் -15 ஆகிய படங்களை தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிலையில் இந்த படங்களில் நடிப்பதற்காக அறிமுக நடிகர் - நடிகை தேர்வு நடந்து வருவதாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி பரவியது. அதை பார்த்துவிட்டு புதுமுக நடிகர் நடிகைகள் பலரும் விண்ணப்பித்து வருகிறார்கள். இதையடுத்து அந்த நிறுவனம் தற்போது ஒரு அவசர அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தற்போது எங்கள் நிறுவனம் தயாரித்து வரும் ஆர்.சி-15, எஸ்விசி- 50 படங்களுக்கு அறிமுக நடிகர்களை தேர்வு செய்யவில்லை. இது குறித்து வெளியாகி உள்ள அனைத்து செய்திகளும் முழுக்க முழுக்க வதந்தியே. அதனால் யாரும் சோசியல் மீடியாவில் வெளியான இந்த செய்தியை நம்பி ஏமாற வேண்டாம் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.




