மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சூர்யா தயாரித்து நடித்த ஜெய்பீம் என்ற படத்தை இயக்கியவர் ஞானவேல். இவர் அடுத்தபடியாக மறைந்த சரவணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் மற்றும் ஜீவஜோதி இடையே நடந்த சட்டப் போராட்டம் மற்றும் ஜீவ ஜோதியின் கணவர் சாந்தகுமார் கொலை சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டில் நடந்த வழக்கு குறித்த கதையை படமாக்க திட்டமிட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை 18 ஆண்டுகளாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த கதையை தமிழில் இயக்காமல் ஹிந்தியில் தோசா கிங் என்ற பெயரில் இயக்குகிறார். ஜங்கிள் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் சரவணபவன் ராஜகோபால் மற்றும் ஜீவஜோதி கேரக்டர்களில் பிரபல பாலிவுட் நடிகர் - நடிகைகள் நடிக்க இருக்கிறார்கள். இது குறித்த தகவலை ஜுங்கிள் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.