மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சின்னத்திரை நடிகையான ஸ்ரீநிதி சில தினங்களுக்கு முன் திடீரென சர்ச்சையான பதிவுகளை வெளியிட்டு சிக்கலில் சிக்கினார். அவரை கவுன்சிலிங்கிறாக சென்னை புறநகர் பகுதியில் உள்ள மனநல காப்பகத்திற்கு அனுப்பியிருந்தனர். கவுன்சிலிங்கிற்கு பிறகு வெளியே வந்த ஸ்ரீநிதி 'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' என கெத்தாக வீடியோ வெளியிட்டிருந்தார். அதுமுதலே அவரது பாலோவர்களும் ரீ-ஆக்டிவ் ஆகி ஸ்ரீநிதியின் பதிவுகளை விடாமல் துரத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஸ்ரீநிதி நடிகை ஷகிலா மற்றும் ஸ்ரீநிதியின் அம்மா மூவரும் சேர்ந்து நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்பட பதிவில், 'த்ரீ இன்டிபெண்டண்ட் வுமன்... ஷகீலா அம்மாவுக்கு நன்றி சொல்லமாட்டேன். நீங்க என்ன நல்ல புரிஞ்சிக்கிட்டீங்க. மனசாரா உங்களுக்கொரு முத்தம் கொடுத்தேன் அது போதும்' என பதிவிட்டுள்ளார். மேலும் மற்றொரு பதிவில் ஸ்ரீநிதியும், ஷகீலாவும் கண்ணத்தோடு கண்ணம் வைத்து ஒட்டி நிற்கும் புகைப்படத்தையும் ஸ்ரீநிதி வெளியிட்டுள்ளார்.