லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள படம் மழை பிடிக்காத மனிதன். இந்த படத்தில் நடிகர் சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்கள் தவிர இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் பிருத்வி அம்பார் நடித்துள்ளார். இவர் படம் முழுவதும் விஜய் ஆண்டனியுடன் இணைந்து பயணிக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் ஆண்டனியின் கதாபாத்திரம் படத்தில் பேசும் வசனங்கள் வெறும் இரண்டு பக்கத்தில் அடங்கிவிடும் என்று கூறியுள்ள விஜய் மில்டன் அவருக்கும் சேர்த்து படத்தில் வளவள என பேசும் கதாபாத்திரத்தில் பிருத்வி அம்பார் நடித்துள்ளார் என்று கூறியுள்ளார்.
மேலும் தனது கதாபாத்திரத்திற்கு தானே தமிழில் டப்பிங் பேச பிருத்வி அம்பார் முயற்சித்தாராம். ஆனால் அது சரியாக அமையவில்லை என்பதால் அவருக்கு பதிலாக நடிகர் நகுலை அழைத்து அந்த கதாபாத்திரத்திற்கு டப்பிங் பேச வைத்துள்ளார் விஜய் மில்டன். இதில் ஆச்சரியம் என்னவென்றால் முதலில் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நகுலை தான் தனது மனதில் நினைத்து வைத்திருந்தேன் என்று கூறியுள்ளார் விஜய் மில்டன்.