புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
ஒரு பக்கம் நடிகை கடத்தல் வழக்கு சம்பந்தமான விசாரணை, நடிகர் திலீப்புக்கு நெருக்கடியை கொடுத்து வந்தாலும், அதையெல்லாம் சமாளித்துக் கொண்டு இன்னொரு பக்கம் படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார் திலீப். அந்தவகையில் கடந்த 2018லேயே பறக்கும் பப்பன் என்கிற படத்தில் திலீப் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. கிராமத்தில் இருக்கும் ஒருவனுக்கு சூப்பர் பவர் கிடைப்பதாகவும், அதன்பின் நடக்கும் அதிசயங்கள் என்ன என்பதை மையப்படுத்தியும் இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது.
கொரோனா தாக்கம், திலீப்பின் வழக்கு பிரச்னைகள் ஆகியவற்றால் இந்த படம் துவங்குவது தாமதமாகி வந்தது. இந்த நிலையில் இந்த படம் விரைவில் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமல்ல இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்கிற தகவலும் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அனிருத் போன்றவர்கள் இசை மற்றும் சூப்பர்மேன் கதையம்சம் இதெல்லாம் சேர்த்து, இந்த படத்தை பான் இந்தியா லெவலில் வெளியிடுவதற்கு வாய்ப்பு இருப்பதாக திலீப் கருதுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.