ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த படத்தில் நடித்த விஜய்சேதுபதி, மலையாள நடிகர் பஹத் பாசில் உள்ளிட்டோரும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது. இந்த படத்தை தொடர்ந்து, அடுத்ததாக இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் கமல் ஒரு படம் நடிக்க இருக்கிறார் என்பது அதிகாரப்பூர்வமாக வெளியான தகவல்.
இந்த மகேஷ் நாராயணன் கமல் நடித்த விஸ்வரூபம் படத்திற்கு எடிட்டராக பணியாற்றியவர். மலையாளத்தில் சீ யூ சூன், மாலிக் ஆகிய படங்களையும் இயக்கியவர். விக்ரம் படம் போல இந்தப் படத்திலும் கமலுக்கு இணையான இன்னொரு முக்கிய கதாபாத்திரம் இருப்பதாகவும் அந்த கதாபாத்திரத்தில் மம்முட்டியை நடிக்க வைக்க தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
சமீபத்தில் விக்ரம் படம் வெளியீட்டுக்கு முன்பாக கேரளாவில் அதன் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசியபோது கூட, நானும் மம்முட்டியும் இணைந்து நடிப்பது பல வருடங்களாக தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. கூடிய விரைவில் அது நடக்கும் என்று கூறி இருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.