இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த படத்தில் நடித்த விஜய்சேதுபதி, மலையாள நடிகர் பஹத் பாசில் உள்ளிட்டோரும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது. இந்த படத்தை தொடர்ந்து, அடுத்ததாக இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் கமல் ஒரு படம் நடிக்க இருக்கிறார் என்பது அதிகாரப்பூர்வமாக வெளியான தகவல்.
இந்த மகேஷ் நாராயணன் கமல் நடித்த விஸ்வரூபம் படத்திற்கு எடிட்டராக பணியாற்றியவர். மலையாளத்தில் சீ யூ சூன், மாலிக் ஆகிய படங்களையும் இயக்கியவர். விக்ரம் படம் போல இந்தப் படத்திலும் கமலுக்கு இணையான இன்னொரு முக்கிய கதாபாத்திரம் இருப்பதாகவும் அந்த கதாபாத்திரத்தில் மம்முட்டியை நடிக்க வைக்க தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
சமீபத்தில் விக்ரம் படம் வெளியீட்டுக்கு முன்பாக கேரளாவில் அதன் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசியபோது கூட, நானும் மம்முட்டியும் இணைந்து நடிப்பது பல வருடங்களாக தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. கூடிய விரைவில் அது நடக்கும் என்று கூறி இருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.