புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த படத்தில் நடித்த விஜய்சேதுபதி, மலையாள நடிகர் பஹத் பாசில் உள்ளிட்டோரும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது. இந்த படத்தை தொடர்ந்து, அடுத்ததாக இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் கமல் ஒரு படம் நடிக்க இருக்கிறார் என்பது அதிகாரப்பூர்வமாக வெளியான தகவல்.
இந்த மகேஷ் நாராயணன் கமல் நடித்த விஸ்வரூபம் படத்திற்கு எடிட்டராக பணியாற்றியவர். மலையாளத்தில் சீ யூ சூன், மாலிக் ஆகிய படங்களையும் இயக்கியவர். விக்ரம் படம் போல இந்தப் படத்திலும் கமலுக்கு இணையான இன்னொரு முக்கிய கதாபாத்திரம் இருப்பதாகவும் அந்த கதாபாத்திரத்தில் மம்முட்டியை நடிக்க வைக்க தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
சமீபத்தில் விக்ரம் படம் வெளியீட்டுக்கு முன்பாக கேரளாவில் அதன் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசியபோது கூட, நானும் மம்முட்டியும் இணைந்து நடிப்பது பல வருடங்களாக தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. கூடிய விரைவில் அது நடக்கும் என்று கூறி இருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.