நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு |
கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்த நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரின் திருமணம் நாளை(ஜூன் 9) மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. அவர்களின் திருமணத்தில் உறவினர்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் கலந்து கொள்கிறார்கள். இந்த திருமணத்திற்காக மகாபலிபுரம் கடற்கரை ஓரம் பிரமாண்டமான செட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த திருமண நிகழ்ச்சியை இயக்குனர் கவுதம் மேனன் மூலம் படமாக்கி அதை ஓடிடி தளம் வெளியிடுகிறது. இதன் காரணமாக நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில் கலந்து கொள்ள வருபவர்கள் செல்போன் கொண்டு வரக்கூடாது. திருமண நிகழ்ச்சிகளை போட்டோ எடுக்க கூடாது என்று பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் நேற்று திருமணத்திற்கு முந்தைய மெஹந்தி நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களுக்கு மருதாணி நிகழ்ச்சி குறித்த தகவல் அச்சிடப்பட்ட தண்ணீர் பாட்டில் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமண நிகழ்ச்சிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டு வருகிறது.