'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் | த்ரிஷ்யம்-3க்கு முன்பாக புதிய படத்தை ஆரம்பித்த ஜீத்து ஜோசப் | பிளாஷ்பேக்: காணாமல் போன நல்ல இயக்குனர் |
டைரி, தேஜாவு, டி-பிளாக் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் அருள்நிதி. இந்த படங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ரிலீஸாக உள்ளன. இதையடுத்து டிமான்டி காலனி 2 படத்திலும் நடிக்க தயாராகி வருகிறார். இந்நிலையில் ஜோதிகா நடித்த ராட்சசி படத்தை இயக்கி கவுதம் ராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார் அருள்நிதி. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் கிடா மீசையுடன் முரட்டு னாக்கில் பக்கா கிராமத்து இளைஞராக உள்ளார் அருள்நிதி. இவரது தோற்றத்தை பார்க்கும் போது பக்கா கிராமத்து கதையில் இந்த படம் உருவாகும் என தெரிகிறது. இமான் இசையமைக்க உள்ளார். மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது. விரைவில் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளனர்.