மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
அண்ணாத்த படத்தை அடுத்து நெல்சன் இயக்கும் தனது 169வது படத்தில் நடிப்பதற்கு தயாராகி கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அதேப்போல் எச்.வினோத் இயக்கிய வலிமை படத்தை அடுத்து தற்போது மீண்டும் அவரது இயக்கத்தில் தனது 61ஆவது படத்தில் நடித்து வருகிறார் அஜித் குமார். அவருக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நடிகர் ரஜினியை அவரது வீட்டிற்கு சென்று அஜித் குமார் சந்தித்ததாக ஒரு புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஆனால் அந்தப் புகைப்படத்தை பார்க்கையில் ரஜினியும் அஜித்தும் நேரில் சந்தித்துக்கொண்ட புகைப்படமாக தெரியவில்லை. தனித்தனியே அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை மார்பிங் முறையில் இணைத்து வெளியிட்டது போல் தெரிகிறது. இதனால் நெட்டிசன்கள் மிகுந்த குழப்பத்துக்கு உள்ளாகி வருகிறார்கள்.