மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தெலுங்குத் திரையுலகின் 'அழகான ராட்சசி' என ராஷ்மிகா மந்தானாவைச் சொல்லலாம். அவருக்கு அப்படி ஒரு ரசிகர் கூட்டம் தெலுங்கில் இருக்கிறது. தமிழில் 'சுல்தான்' மூலம் அறிமுகமானாலும் அடுத்து விஜய்யுடன் நடிக்கும் படம்தான் அவருடைய அட்டகாசம் ஆரம்பமாக உள்ளது. படத்தின் பூஜையிலேயே தன்னுடைய சிரிப்பால் வசீகரித்தவர்.
அடிக்கடி இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுக்காக விதவிதமான புகைப்படங்களைப் பதிவிடுவழதை வழக்கமாக வைத்திருப்பவர் ராஷ்மிகா. இன்ஸ்டாவில் கடைசியாக அவர் வெளியிட்ட ஒரே ஒரு புகைப்படத்திற்கு இருபத்தி இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை அள்ளிக் கொடுத்துள்ளனர் ரசிகர்கள்.
சாம்பல் நிற லெஹங்கா ஆடையில், மந்தகாசச் சிரிப்பில் மந்தானா இருக்கும் புகைப்படத்துடன், “என்னுடைய சிரிப்பை உங்களுக்கு அனுப்புகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளதால்தான் இவ்வளவு லைக்ஸ் போலிருக்கிறது.