லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
காளிதாஸ் படத்திற்கு பிறகு பரத் மீண்டும் பிசியான நடிகராகி விட்டார். ஹிந்தி மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த நடுவன் வெளியானது. தற்போ 8 பிளஸ், லவ், முன்னரிவான் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவர் நடித்து வந்த மிரள் படம் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இதில் வாணி போஜன் நாயகியாக நடித்திருக்கிறார்.
கே.எஸ்.ரவிக்குமார், மீரா கிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி, அர்ஜை, நரேன் பாலாஜி, மாஸ்டர் அங்கித், மாஸ்டர் சாந்தனு நடித்துள்ளனர். ஆக்சஸ் பிலிம் பேக்டரி சார்பில் ஜி.டில்லி பாபு தயாரிக்கிறார். எஸ்.என்.பிரசாத் இசை அமைக்கிறார், சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி அறிமுக இயக்குனர் எம்.சக்திவேல் கூறியதாவது: ஸ்லாஷர் த்ரில்லர் வகையைச் சேர்ந்த இப்படம் தமிழ் திரையில் இதுவரை கண்டிராத திரில்லர் அனுபவத்தை வழங்கும், பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. சிவகார்த்திகேயன் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு பிரமோஷன் பணிகளை துவக்கி வைத்துள்ளார், என்றார்.