துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
காளிதாஸ் படத்திற்கு பிறகு பரத் மீண்டும் பிசியான நடிகராகி விட்டார். ஹிந்தி மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த நடுவன் வெளியானது. தற்போ 8 பிளஸ், லவ், முன்னரிவான் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவர் நடித்து வந்த மிரள் படம் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இதில் வாணி போஜன் நாயகியாக நடித்திருக்கிறார்.
கே.எஸ்.ரவிக்குமார், மீரா கிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி, அர்ஜை, நரேன் பாலாஜி, மாஸ்டர் அங்கித், மாஸ்டர் சாந்தனு நடித்துள்ளனர். ஆக்சஸ் பிலிம் பேக்டரி சார்பில் ஜி.டில்லி பாபு தயாரிக்கிறார். எஸ்.என்.பிரசாத் இசை அமைக்கிறார், சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி அறிமுக இயக்குனர் எம்.சக்திவேல் கூறியதாவது: ஸ்லாஷர் த்ரில்லர் வகையைச் சேர்ந்த இப்படம் தமிழ் திரையில் இதுவரை கண்டிராத திரில்லர் அனுபவத்தை வழங்கும், பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. சிவகார்த்திகேயன் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு பிரமோஷன் பணிகளை துவக்கி வைத்துள்ளார், என்றார்.