ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தமிழ் சினிமாவில் தற்போது பிசியான நடிகர் யார் என்றால் அது அசோக் செல்வன் தான். ஒரே ஒரு வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த அசோக் செல்வன் ‛ஓ மை கடவுளே' என்ற படத்தை சொந்தமாக தயாரித்து நடித்து, அந்த படத்தின் வெற்றியின் மூலம் பிசியான நடிகர் ஆகிவிட்டார்.
மன்மதலீலை, சில நேரங்களில் சில மனிதர்கள், ஹாஸ்டல் படங்களில் நடித்த அவர் தற்போது வேழம் என்ற படத்தில் நடித்து முடித்திருகிறார். இதில் ஜனனி ஐயர், ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் ஹிரோயின், 24ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது. இது தவிர ரா.கார்த்திக் இயக்கத்தில் 'நித்தம் ஒரு வானம்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா, ஷிவதா ஆகியோர் நடிக்கிறார்கள்.
இந்நிலையில் கமல்ஹாசனுடன் விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 படங்களின் உதவி இயக்குனராக பணியாற்றிய கார்த்திக் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரிக்கிறார். இதில் மேகா ஆகாஷ் அசோக் செல்வன் ஜோடியாக நடிக்கிறார். வருகிற 8ம் தேதி முதல் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது.