மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
கேரளாவை சேர்ந்த கர்நாடக இசை கலைஞர் சங்கீதா சஜித். திரைப்பட பின்னணி பாடகியாக மாறிய சங்கீதா, தமிழ், மலையாள மொழி படங்களில் 200க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். தமிழில் மிஸ்டர் ரோமியா படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இடம் பெற்ற 'தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை' பாடல் மிகவும் புகழ்பெற்றது. கடைசியாக பிருத்விராஜ் நடித்த குருதி படத்தில் பாடி இருந்தார்.
46 வயதான சங்கீதா கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக, திருவனந்தபுரத்தில் உள்ள தன் சகோதரி வீட்டில் தங்கி இருந்து அதற்காக சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை காலமானார். சங்கீதாவின் மறைவிற்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.