புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
‛நேர்கொண்ட பார்வை, வலிமை' படங்களை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கும் தனது 61 ஆவது படத்தில் நடித்து வருகிறார் அஜித் குமார். இந்த படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் தனது 62வது படத்தில் நடிக்கப் போகிறார். ஏற்கனவே அஜித், நடித்த என்னை அறிந்தால் படத்தில் அதாரு அதாரு என்ற மற்றும் வலிமை படத்திலும் இரண்டு பாடல்களை எழுதி இருக்கிறார் விக்னேஷ் சிவன். இப்போது அவரின் படத்தை இயக்கப் போகிறார். இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார்.
இந்தநிலையில் ஒரு பேட்டியில் அப்படம் குறித்து ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதில், அஜித்தின் 62வது படத்தை மிக வித்தியாசமான கதையில் இயக்கப் போகிறேன். என்னுடைய 100 சதவீத உழைப்பையும் முயற்சியையும் இந்த படத்துக்காக கொடுப்பேன் . அதனால் இந்த படத்தில் இதுவரை பார்க்காத ஒரு அஜித் குமாரை ரசிகர்கள் பார்க்கலாம். தரமான படமாகவும் அனைவருக்கும் திருப்தி அளிக்கும் படமாகவும் இது கண்டிப்பாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.