கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா |
பாடகராகவும், பாடலாசிரியராகவும், நடிகராகவும் சினிமாவில் என்ட்ரி கொடுத்த அருண் ராஜா காமராஜ், கனா படத்தில் இயக்குனராக உருவெடுத்தார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது திரைக்கு வந்துள்ள நெஞ்சுக்கு நீதி படத்தையும் இயக்கினார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பரவலாக பாராட்டுகள் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் அடுத்தபடியாக அருண் ராஜா காமராஜ் இயக்கும் படம் குறித்த ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
கனா படத்தை அடுத்து கார்த்தியை சந்தித்து ஒரு கதை சொல்லி இருக்கிறார் அருண் ராஜா காமராஜ். அப்போது அவர் பல படங்களில் பிசியாக இருந்துள்ளார். அதன்காரணமாகவே உதயநிதி நடிப்பில் நெஞ்சுக்கு நீதி படத்தை இயக்கி இருக்கிறார். இந்த நிலையில் தற்போது கார்த்தி நடிக்கும் படத்தை அடுத்தபடியாக இயக்குவதற்கு தயாராகிவிட்டார் அருண்ராஜா காமராஜ்.
பல மொழி படமாக உருவாகும் இப்படம் முழுக்க முழுக்க தென்னாப்பிரிக்காவில் நடக்கும் கதையில் உருவாகிறதாம். இந்த படத்தில் வில்லனாக நடிக்க பிரபல தெலுங்கு நடிகரிடத்தில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. தற்போது ராஜூமுருகன் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கிறார் கார்த்தி. அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் அருண் ராஜா காமராஜ் இயக்கும் படத்தில் நடிப்பதற்கு கால்சீட் கொடுத்திருக்கிறார்.