தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், பெப்சிக்கும் இடையே சம்பளம் விஷயத்தில் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கை :
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் மே 2 அன்று நடந்தது. இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகிய இரு தரப்பினருக்கும் மட்டுமே காலங்காலமாக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆனது இருந்து வருகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான புதிய ஒப்பந்தம் மார்ச் 9ம் அன்று இரு தரப்பினர் இடையே நடந்தது. ஆனால் ஒப்பந்தத்தை அவமதிக்கும் வகையில் பெப்சி அமைப்பினர் செயல்பட்டதால் இரு தரப்புக்கும் இடையே ஒப்பந்தமான ரத்து செய்யப்படுகிறது. இனி தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தங்களுக்கு தேவையான வேலையாட்களை யாரை வைத்து வேண்டுமானாலும் படப்பிடிப்பு பணிகளை மேற்கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி இடையேயான மோதல் அதிகமாகி உள்ளது.