என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், பெப்சிக்கும் இடையே சம்பளம் விஷயத்தில் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கை :
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் மே 2 அன்று நடந்தது. இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகிய இரு தரப்பினருக்கும் மட்டுமே காலங்காலமாக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆனது இருந்து வருகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான புதிய ஒப்பந்தம் மார்ச் 9ம் அன்று இரு தரப்பினர் இடையே நடந்தது. ஆனால் ஒப்பந்தத்தை அவமதிக்கும் வகையில் பெப்சி அமைப்பினர் செயல்பட்டதால் இரு தரப்புக்கும் இடையே ஒப்பந்தமான ரத்து செய்யப்படுகிறது. இனி தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தங்களுக்கு தேவையான வேலையாட்களை யாரை வைத்து வேண்டுமானாலும் படப்பிடிப்பு பணிகளை மேற்கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி இடையேயான மோதல் அதிகமாகி உள்ளது.