லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பொன்னியின் செல்வன்'. இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் முதல் பாகம் அடுத்த சில மாதங்களில் வெளியாக உள்ளது.
தெலுங்கு, கன்னட மொழியில் வெளியாகி பான்-இந்தியா படமாக வசூலைக் குவித்த படங்களுக்கு பதில் சொல்லும் விதமாக தமிழில் இந்தப் படம் அமையுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.
இப்படத்தின் இரண்டு பாகங்களின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ.125 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் 1000 கோடி வசூலைக் கடந்தால்தான் தமிழ் சினிமாவுக்குப் பெருமை.
மணிரத்னம் இயக்கி கடைசியாக வெளிவந்த படம் 'செக்கச் சிவந்த வானம்'. அப்படத்திற்குப் பிறகு 'பொன்னியின் செல்வன்' படத்திற்காக மட்டுமே அவர் உழைத்து வருகிறார். மணிரத்னம் 'டச்' உடன் 'பொன்னியின் செல்வன்' இருந்தால் 1000 கோடி வசூல் எளிதுதான்.