பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் பிரபாஸிற்கு சூப்பர் ஹிட்டாக அமைந்தன. அதன்பிறகு அவர் நடித்த சாஹோ, ராதேஷ்யாம் படங்கள் அதிர்ச்சி தோல்வியை கொடுத்தன. இந்த நிலையில் தற்போது ஆதிபுருஷ் படத்தில் நடித்து முடித்து விட்டவர், சலார் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் நடித்துக் கொண்டே தெலுங்கில் பிராஜக்ட் கே மற்றும் மாருதி இயக்கும் படங்களிலும் நடிக்க கமிட்டாகி இருந்தார் பிரபாஸ். ஆனால் தான் நடித்த இரண்டு படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்து விட்டதால், சலார் படத்தை மெகா ஹிட் படமாக கொடுத்துவிட வேண்டும் என்பதில் தனது கவனத்தை முழுமையாக திருப்பி இருக்கிறார் பிரபாஸ்.
தற்போது கேஜிஎப்- 2 படம் சூப்பர் ஹிட் அடித்திருப்பதால் சலார் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதனால் சலார் படத்தில் நடித்து முடிக்கும்வரை வேறு படங்களில் நடிக்கப்போவதில்லை என்று முடிவெடுத்துள்ள பிரபாஸ், நாக் அஸ்வின் இயக்கும் பிராஜெக்ட் கே மற்றும் மாருதி இயக்கும் படத்தை தற்காலிகமாக தள்ளி வைத்திருக்கிறார் என்ற தகவல் டோலிவுட்டில் வெளியாகியிருக்கிறது.