பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் பிரபாஸிற்கு சூப்பர் ஹிட்டாக அமைந்தன. அதன்பிறகு அவர் நடித்த சாஹோ, ராதேஷ்யாம் படங்கள் அதிர்ச்சி தோல்வியை கொடுத்தன. இந்த நிலையில் தற்போது ஆதிபுருஷ் படத்தில் நடித்து முடித்து விட்டவர், சலார் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் நடித்துக் கொண்டே தெலுங்கில் பிராஜக்ட் கே மற்றும் மாருதி இயக்கும் படங்களிலும் நடிக்க கமிட்டாகி இருந்தார் பிரபாஸ். ஆனால் தான் நடித்த இரண்டு படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்து விட்டதால், சலார் படத்தை மெகா ஹிட் படமாக கொடுத்துவிட வேண்டும் என்பதில் தனது கவனத்தை முழுமையாக திருப்பி இருக்கிறார் பிரபாஸ்.
தற்போது கேஜிஎப்- 2 படம் சூப்பர் ஹிட் அடித்திருப்பதால் சலார் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதனால் சலார் படத்தில் நடித்து முடிக்கும்வரை வேறு படங்களில் நடிக்கப்போவதில்லை என்று முடிவெடுத்துள்ள பிரபாஸ், நாக் அஸ்வின் இயக்கும் பிராஜெக்ட் கே மற்றும் மாருதி இயக்கும் படத்தை தற்காலிகமாக தள்ளி வைத்திருக்கிறார் என்ற தகவல் டோலிவுட்டில் வெளியாகியிருக்கிறது.