பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
தென்னிந்திய சினிமாக்களில் இனிவரும் நாட்களில் பான் இந்திய திரைப்படம் என்கிற வார்த்தை தவிர்க்க முடியாத ஒன்றாக புழக்கத்திற்கு வந்து விட்டது. குறிப்பாக பாகுபலி படத்தை தொடர்ந்து, இந்த வார்த்தை அதிகம் பேசப்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன் வெளியான புஷ்பா, சமீபத்தில் வெளியான ராதேஷ்யாம், ஆர்ஆர்ஆர் மற்றும் கன்னடத்திலிருந்து வெளியாகியுள்ள கேஜிஎப் ஆகிய படங்கள் பான் இந்தியா ரிலீஸாக வெளியாவதால் ஏற்படும் லாபங்களை வெளிச்சம் போட்டு காட்டி விட்டன.
அந்த வகையில் சமீபத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படம் மூலமாக தெலுங்கு தவிர்த்து மற்ற மொழி ரசிகர்களுக்கும் நடிகர் ஜூனியர் என்டிஆர் நன்கு அறிமுகமாகி விட்டார். இதைத்தொடர்ந்து அவர் நடிக்க உள்ள அவரது முப்பதாவது படம் பான் இந்தியா படமாக உருவாகிறது என்பதை அந்த படத்தின் இயக்குனர் கொரட்டலா சிவா தற்போது தெரிவித்துள்ளார். அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக பான் இந்தியா படத்திற்கான கதை உருவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு ஜனதா கேரேஜ் என்கிற வெற்றிப்படத்தை ஜூனியர் என்டிஆர் கொடுத்தவர்தான் இந்த கொரட்டாலா சிவா என்பது குறிப்பிடத்தக்கது.