ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தென்னிந்திய சினிமாக்களில் இனிவரும் நாட்களில் பான் இந்திய திரைப்படம் என்கிற வார்த்தை தவிர்க்க முடியாத ஒன்றாக புழக்கத்திற்கு வந்து விட்டது. குறிப்பாக பாகுபலி படத்தை தொடர்ந்து, இந்த வார்த்தை அதிகம் பேசப்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன் வெளியான புஷ்பா, சமீபத்தில் வெளியான ராதேஷ்யாம், ஆர்ஆர்ஆர் மற்றும் கன்னடத்திலிருந்து வெளியாகியுள்ள கேஜிஎப் ஆகிய படங்கள் பான் இந்தியா ரிலீஸாக வெளியாவதால் ஏற்படும் லாபங்களை வெளிச்சம் போட்டு காட்டி விட்டன.
அந்த வகையில் சமீபத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படம் மூலமாக தெலுங்கு தவிர்த்து மற்ற மொழி ரசிகர்களுக்கும் நடிகர் ஜூனியர் என்டிஆர் நன்கு அறிமுகமாகி விட்டார். இதைத்தொடர்ந்து அவர் நடிக்க உள்ள அவரது முப்பதாவது படம் பான் இந்தியா படமாக உருவாகிறது என்பதை அந்த படத்தின் இயக்குனர் கொரட்டலா சிவா தற்போது தெரிவித்துள்ளார். அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக பான் இந்தியா படத்திற்கான கதை உருவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு ஜனதா கேரேஜ் என்கிற வெற்றிப்படத்தை ஜூனியர் என்டிஆர் கொடுத்தவர்தான் இந்த கொரட்டாலா சிவா என்பது குறிப்பிடத்தக்கது.