எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
தமிழ்த் திரையுலகத்தின் முக்கியமான காதல் ஜோடியாக கடந்த சில வருடங்களாக இருப்பவர்கள் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன். இருவருமே தற்போது மிகவும் பிஸியாக இருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்பவர்கள் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக எங்கும் செல்லவில்லை.
விக்னேஷ் சிவன் தற்போது 'காத்து வாக்குல ரெண்டு காதல்' பட வேலைகளில் மிகவும் பிஸியாக இருக்கிறார். அந்த வேலைக்கு நடுவிலும் நயன்தாராவைக் காதலிக்கும் வேலையை மறக்காமல் செய்து வருகிறார். கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு இருவரது செல்பி புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
அதோடு, “கடைசி கட்ட வேலைகளுக்கு நடுவில் கொஞ்சம் மூச்சு விடும் நேரம். படம் சென்சாருக்குத் தயாராகி வருகிறது. நல்லதே நடக்க வேண்டுமென பிரார்த்திக்கிறேன். இன்று முதல் அனைத்து அப்டேட்டுகளும் வரும் என்றும்,” குறிப்பிட்டுள்ளார்.
விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்க அனிருத் இசையில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படம் ஏப்ரல் 28ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.