திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
தென்னிந்தியத் திரையுலகத்திலிருந்து இரண்டு படங்கள் அடுத்தடுத்த நாட்களில் பான்--இந்தியா படங்களாக வெளியாகி வசூலைக் குவித்துக் கொண்டிருக்கிறது. விஜய் நடித்த தமிழ்ப் படமான 'பீஸ்ட்', யஷ் நடித்த கன்னடப் படமான 'கேஜிஎப் 2' இரண்டு படங்களுமே இந்த வார வெளியீடுகளாக அமைந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதனிடையே, கன்னட மீடியாக்களில் 'கேஜிஎப் 2' படத்தின் பிரத்யேகக் காட்சியை நடிகர் ரஜினிகாந்த் பார்த்துவிட்டார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. அது மட்டுமல்ல படத்தைப் பார்த்து வியந்து போன ரஜினிகாந்த், இயக்குனரை நேரில் பார்த்து பாராட்ட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.
அதே போல 'பீஸ்ட்' படத்தையும் ரஜினிகாந்த் பார்த்ததாகவும் ஆனால், படத்தைப் பார்த்து எந்த கமெண்ட்டும் சொல்லாமல் போய்விட்டதாகவும் ஒரு செய்தி வெளியாகி உள்ளது. 'பீஸ்ட்' படத்தை இயக்கிய நெல்சன் தான் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சில கன்னட ஊடகங்கள் அதற்குள் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கப் போகிறாரா என செய்திகளை வெளியிட ஆரம்பித்துவிட்டன. பிரசாந்த் நீல் தற்போது பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தை இயக்கி வருகிறார். அதற்கடுத்து ஜுனியர் என்டிஆர் நடிக்க உள்ள படத்தை இயக்கப் போகிறார்.