புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கூட ஒரு தமிழ்ப் படம் அதிக தியேட்டர்களில் வெளியாகாது. ஆனால், கர்நாடகாவின் தலைநகரான பெங்களூருவில் தமிழ்ப் படங்கள் எப்போதுமே அதிக தியேட்டர்களில் வெளியாகும். காலம் காலமாக நடந்து வரும் ஒரு விஷயம் இது.
நாளை விஜய் நடித்துள்ள தமிழ்ப் படமான 'பீஸ்ட்', நாளை மறுநாள் யஷ் நடித்துள்ள கன்னடப் படமான 'கேஜிஎப் 2' ஆகிய இரண்டு படங்களுமே தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகிறது.
பெங்களூருவைப் பொறுத்தவரையில் கன்னடப் படமான 'கேஜிஎப் 2' ஏப்ரல் 14ம் தேதியன்று அங்குள்ள தியேட்டர்களில் மொத்தமாக 450க்கும் மேற்பட்ட காட்சிகளாக நடைபெற உள்ளது. அதே சமயம் தமிழ்ப் படமான 'பீஸ்ட்' நாளை ஏப்ரல் 13ம் தேதியன்று 750க்கும் மேற்பட்ட காட்சிகளாக நடைபெற உள்ளது. இருப்பினும் இரண்டாம் நாளில் 'பீஸ்ட்' படத்திற்கான காட்சிகள் குறைந்துவிடும். இருந்தாலும் வெளியாகும் முதல் நாளில் அதிகமான காட்சிகளில் திரையிடல் என்பது ஒரு சாதனைதான். இது இன்றைய நிலவரம். இன்னும் சில மணி நேரங்களில் கூடுதல் காட்சிகள் சேரவும் வாய்ப்புள்ளது.