டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தமன் இசையமைப்பில், விஜய், ராஷ்மிகா மந்தானா மற்றும் பலர் நடிக்கும் விஜய்யின் 66வது படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் பூஜையுடன் ஆரம்பமானது.
சென்னையில் எளிமையாக நடைபெற்ற பூஜைக்குப் பின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. படத்தை சென்னையில் அதிகமாகப் படமாக்க வேண்டும் என்று விஜய் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பை மற்ற ஹீரோக்கள் போல ஐதராபாத்தில் நடத்தாமல் சென்னையில் நடத்துபவர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் படப்பிடிப்புக்குப் பிறகான முதல் அப்டேட்டை படத்தின் நாயகி ராஷ்மிகா கொடுத்துள்ளார். பூஜையின் போது அவர் எடுத்த தனி புகைப்படங்களைப் பகிர்ந்து “இந்த ஓரிரு நாட்கள் மிகச் சிறப்பானது…இந்த மேஜிக்கை நீங்கள் பார்க்க என்னால் காத்திருக்க முடியவில்லை…” என்று பதிவிட்டுள்ளார். அவர் விஜய்யுடன் நடிப்பதைப் பற்றித்தான் அப்படி குறிப்பிட்டுள்ளார் என்பதை குழந்தைகள் கூட புரிந்து கொள்ளும். ராஷ்மிகாவின் இந்தப் பதிவிற்கு 28 லட்சம் லைக்குகள் குவிந்துவிட்டது.




