புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தமன் இசையமைப்பில், விஜய், ராஷ்மிகா மந்தானா மற்றும் பலர் நடிக்கும் விஜய்யின் 66வது படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் பூஜையுடன் ஆரம்பமானது.
சென்னையில் எளிமையாக நடைபெற்ற பூஜைக்குப் பின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. படத்தை சென்னையில் அதிகமாகப் படமாக்க வேண்டும் என்று விஜய் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பை மற்ற ஹீரோக்கள் போல ஐதராபாத்தில் நடத்தாமல் சென்னையில் நடத்துபவர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் படப்பிடிப்புக்குப் பிறகான முதல் அப்டேட்டை படத்தின் நாயகி ராஷ்மிகா கொடுத்துள்ளார். பூஜையின் போது அவர் எடுத்த தனி புகைப்படங்களைப் பகிர்ந்து “இந்த ஓரிரு நாட்கள் மிகச் சிறப்பானது…இந்த மேஜிக்கை நீங்கள் பார்க்க என்னால் காத்திருக்க முடியவில்லை…” என்று பதிவிட்டுள்ளார். அவர் விஜய்யுடன் நடிப்பதைப் பற்றித்தான் அப்படி குறிப்பிட்டுள்ளார் என்பதை குழந்தைகள் கூட புரிந்து கொள்ளும். ராஷ்மிகாவின் இந்தப் பதிவிற்கு 28 லட்சம் லைக்குகள் குவிந்துவிட்டது.