பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி | 'மிஸ்டர்.பாரத்' படப்பிடிப்பு நிறைவு : லோகேஷ் கனகராஜ் நேரில் வாழ்த்து | நிவின் பாலி மீது பணமோசடி வழக்கு | ஒரு வருடத்திற்கு முன்பே விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்: கிறிஸ்டோபர் நோலன் புதிய சாதனை | பிளாஷ்பேக்: பாலிவுட்டில் வில்லனாக அறிமுகமான தியாகராஜன் | பிளாஷ்பேக் : நாட்டியத்தால் சினிமாவை இழந்த பி.கே.சரஸ்வதி | தலைவன் தலைவி Vs மாரீசன் - அடுத்த வாரப் போட்டி…! | இந்தியாவில் வசூலை அள்ளும் 'எப் 1, ஜூராசிக் வேர்ல்டு, சூப்பர் மேன்' |
தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தமன் இசையமைப்பில், விஜய், ராஷ்மிகா மந்தானா மற்றும் பலர் நடிக்கும் விஜய்யின் 66வது படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் பூஜையுடன் ஆரம்பமானது.
சென்னையில் எளிமையாக நடைபெற்ற பூஜைக்குப் பின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. படத்தை சென்னையில் அதிகமாகப் படமாக்க வேண்டும் என்று விஜய் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பை மற்ற ஹீரோக்கள் போல ஐதராபாத்தில் நடத்தாமல் சென்னையில் நடத்துபவர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் படப்பிடிப்புக்குப் பிறகான முதல் அப்டேட்டை படத்தின் நாயகி ராஷ்மிகா கொடுத்துள்ளார். பூஜையின் போது அவர் எடுத்த தனி புகைப்படங்களைப் பகிர்ந்து “இந்த ஓரிரு நாட்கள் மிகச் சிறப்பானது…இந்த மேஜிக்கை நீங்கள் பார்க்க என்னால் காத்திருக்க முடியவில்லை…” என்று பதிவிட்டுள்ளார். அவர் விஜய்யுடன் நடிப்பதைப் பற்றித்தான் அப்படி குறிப்பிட்டுள்ளார் என்பதை குழந்தைகள் கூட புரிந்து கொள்ளும். ராஷ்மிகாவின் இந்தப் பதிவிற்கு 28 லட்சம் லைக்குகள் குவிந்துவிட்டது.