39வது பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி | அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை | அடுத்தடுத்து மூன்று பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோ போட்டி | மீண்டும் திரைக்கு வருகிறது அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” | விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா | 'தி ராஜா சாப்' டீசர் : தன் முந்தைய சாதனையை முறியடிக்காத பிரபாஸ் | நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காதது ஏன் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் | மொழிக்காக ‛தக் லைப்' படத்திற்கு தடை விதிக்க முடியாது : உச்ச நீதிமன்றம் | வெறுப்பை பரப்பி சினிமாவை அழிக்கும் ஒரு குழு: கார்த்திக் சுப்பராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு |
தெலுங்கு திரையுலகை தனது பிரமாண்டமான படங்கள் மூலம் அடுத்தடுத்த உயரங்களுக்கு எடுத்து செல்பவர் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி. இவரது இயக்கத்தில் ஜூனியர் என்.டிஆர், பிரபாஸ், ராம்சரண் என மூவருமே தலா இரண்டு படங்களில் நடித்துவிட்ட நிலையில் மகேஷ்பாபு மட்டும் இதுவரை ராஜமவுலியின் இயக்கத்தில் நடிக்கவில்லை. ரசிகர்களின் இந்த மனக்குறை தீரும் விதமாக அடுத்து மகேஷ்பாபு நடிக்கும் படத்தை தான் இயக்க போகிறேன் என சில மாதங்களுக்கு முன் அறிவித்தும் விட்டார். இந்நிலையில் மகேஷ்பாபுவுக்காக இரண்டு கதைகள் தயார்செய்து வைத்துள்ளதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் ராஜமவுலி.
இதுபற்றி அவர் கூறும்போது, “கொரோனா தாக்கம் துவங்கிய பின்னர் வெளியில் எங்கேயும் செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்த சமயத்தில் என் தந்தை விஜயேந்திர பிரசாத், வீட்டில் பொழுதை வசதியாக கழித்து விட கூடாது என கூறினார். அந்த சமயத்தில் பலவிதமான ஐடியாக்களை பேசிப்பேசி மகேஷ்பாபு படத்திற்காக இரண்டு விதமான கதைகளை பிடித்தோம்.. இரண்டுமே மிக பிரமாண்டமான பட்ஜெட்டை கேட்கும் கதைகள் தான். அதேசமயம் மகேஷ்பாபு ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் கதைகள்” என்று கூறியுள்ளார்.