புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தெலுங்கு திரையுலகை தனது பிரமாண்டமான படங்கள் மூலம் அடுத்தடுத்த உயரங்களுக்கு எடுத்து செல்பவர் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி. இவரது இயக்கத்தில் ஜூனியர் என்.டிஆர், பிரபாஸ், ராம்சரண் என மூவருமே தலா இரண்டு படங்களில் நடித்துவிட்ட நிலையில் மகேஷ்பாபு மட்டும் இதுவரை ராஜமவுலியின் இயக்கத்தில் நடிக்கவில்லை. ரசிகர்களின் இந்த மனக்குறை தீரும் விதமாக அடுத்து மகேஷ்பாபு நடிக்கும் படத்தை தான் இயக்க போகிறேன் என சில மாதங்களுக்கு முன் அறிவித்தும் விட்டார். இந்நிலையில் மகேஷ்பாபுவுக்காக இரண்டு கதைகள் தயார்செய்து வைத்துள்ளதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் ராஜமவுலி.
இதுபற்றி அவர் கூறும்போது, “கொரோனா தாக்கம் துவங்கிய பின்னர் வெளியில் எங்கேயும் செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்த சமயத்தில் என் தந்தை விஜயேந்திர பிரசாத், வீட்டில் பொழுதை வசதியாக கழித்து விட கூடாது என கூறினார். அந்த சமயத்தில் பலவிதமான ஐடியாக்களை பேசிப்பேசி மகேஷ்பாபு படத்திற்காக இரண்டு விதமான கதைகளை பிடித்தோம்.. இரண்டுமே மிக பிரமாண்டமான பட்ஜெட்டை கேட்கும் கதைகள் தான். அதேசமயம் மகேஷ்பாபு ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் கதைகள்” என்று கூறியுள்ளார்.