Advertisement

சிறப்புச்செய்திகள்

படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் | சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர் | சீக்கிரமே அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன் - ராஜலெட்சுமி பேட்டி | 160 படங்களைக் கடந்த 2024 ரிலீஸ், 6 படங்கள் மட்டுமே 100 கோடி வசூல் | வித்தியாசமா கூவுறாங்க! மணிமேகலை வெளியிட்ட நறுக் வீடியோ | சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வருத்தத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன் பட நாயகி

10 ஏப், 2022 - 04:33 IST
எழுத்தின் அளவு:
Sivakarthikeyan-movie-heroine-maria-feels-about-ukraine-war

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக டான் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தநிலையில் தற்போது முதன்முதலாக தெலுங்கு திரையுலகிலும் நுழைந்துள்ள சிவகார்த்திகேயன் ஜதிரத்னாலு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனின் இருபதாவது படமாக உருவாகும் இந்த படத்தில் கதாநாயகியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா ரியபோஷப்கா என்பவர் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருவது குறித்து தனது சந்தோசத்தையும் அதே சமயம் தனது மன வருத்தத்தையும் ஒருசேர வெளிப்படுத்தியுள்ளார் மரியா ரியபோஷப்கா.

வருத்தத்திற்கு காரணம் தற்போது அவரது சொந்த நாடான உக்ரைனில் நிலவும் சூழல் தான். சொந்த ஊரை பிரிந்து வந்து பல நாட்கள் ஆகிறது என்றும் அதே சமயம் தற்போது நிலவும் போர்ச்சூழலும், மக்கள் படும் கஷ்டமும் தன்னை வருத்தத்திற்கு உள்ளாக்கி இருப்பதாகவும் கூறியுள்ளார் மரியா. அதேசமயம் சிவகார்த்திகேயன் படத்தில் நடிப்பதன் மூலம் இயக்குனர் அனுதீப், சிவகார்த்திகேயன் போன்ற சுவாரசியமான மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கடமையைச் செய்த எஸ்ஜே.சூர்யா; பலன் தரப்போகும் சிம்புகடமையைச் செய்த எஸ்ஜே.சூர்யா; பலன் ... மகேஷ்பாபு படம் ; ராஜமவுலிக்கு தந்தை போட்ட உத்தரவு மகேஷ்பாபு படம் ; ராஜமவுலிக்கு தந்தை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)