போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் | 'காந்தாரா' பாணியில் உருவாகும் 'மகாசேனா' | பிளாஷ்பேக்: விஜயகாந்த், கமல் இணைந்து நடித்த ஒரே படம் |
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் மார்ச் 25ம் தேதி வெளிவந்த படம் 'ஆர்ஆர்ஆர்'. முதல் நாளில் 100 கோடி, மூன்றே நாட்களில் 500 கோடி என வசூலித்து சாதனை புரிந்த படம், பதினைந்தே நாட்களில் 1000 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளது.
இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத் தயாரிப்பு நிறுவனமான டிவிவி என்டர்டெயின்மெட் அறிவித்துள்ளது. “இந்தியாவில் 1000 கோடி என்பது ஒரு படத்திற்கான கனவு ஓட்டம். உங்களுக்காக எங்களுடைய சிறந்ததைச் செய்தோம், அதற்குப் பதிலாக எங்கள் மீது உங்களது விலைமதிப்பில்லா அன்பைச் செலுத்தியுள்ளீர்கள். பீம் என்டிஆர் ரசிகர்களுக்கும், ராமராஜு ராம்சரண் ரசிகர்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கும் நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
உலக அளவில் 1000 கோடி ரூபாய் வசூலைக் கடந்த மூன்றாவது இந்தியப் படம் இது. ஆமீர்கான் நடித்த 'டங்கல்', ராஜமவுலி இயக்கிய 'பாகுபலி 2' ஏற்கெனவே உலக அளவில் 1000 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது.