யாரிடமும் உதவி கேட்காதீங்க : செல்வராகவன் | தாலாட்டுதே வானம்... என தாலாட்டி சென்ற ஜெயச்சந்திரனின் பிறந்தநாள் இன்று! | பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் | போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் | பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை | நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் | நான் அவள் இல்லை ; டீப் பேக் வீடியோ குறித்து வித்யா பாலன் எச்சரிக்கை |
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. ஏப்ரல் 9ம் தேதி பிக்பாஸ் அல்டிமேட்டின் இறுதி போட்டி நடைபெற்று, அதன் ஒளிபரப்பு ஏப்ரல் 10ம் தேதி நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்த வாரத்திற்கான எவிக்சன் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதற்கிடையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் தாமரையை ஹவுஸ்மேட்கள் டார்கெட் செய்து வருகின்றனர். 'நானாக நானிருந்தேன்' என்ற டாஸ்க்கின் போது ரம்யா பாண்டியனும், அபிராமியும் 'தாமரைக்கு தனித்துவமும் இல்லை, நேர்மையும் இல்லை அவர் நடிக்கிறார்' என அவரது குறையை சுட்டிக்காட்டி பேசுகின்றனர். இதனால் மூன்று பேருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெறுகிறது. அதில் முதல் சுற்றில் தாமரை வெளியேற்றப்படுவதால் அவர் கண்கலங்குகிறார். மேலும், வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், நிரூப், அபிராமி, ரம்யா ஆகிய மூவரும் விளையாடுகின்றனர். அதில் நிரூப், அபிராமி பாலாவின் பின்னாடியே செல்வதாக சொல்கிறார். இதனால் மனமுடைந்த அபிராமி கதறி அழுகிறார்.
இது ஒருபுறமிருக்க இதுவரை பதிவான வாக்குகள் அடிப்படையில் அபிராமி அல்லது ரம்யா இந்த வாரம் எவிக்சன் ஆகலாம் என கூறப்படுகிறது. அதேசமயம் ஹவுஸ்மேட்கள் தாமரையை டார்கெட் செய்து வெளியேற்றுவதில் குறியாக உள்ளனர் என்றும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.