'மூக்குத்தி அம்மன் 2' படப்பிடிப்பை நிறைவு செய்த கன்னட நடிகர் துனியா விஜய் | ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி |
பாலசந்தர் இயக்கத்தில், எம்எஸ் விஸ்வநாதன் இசையமைப்பில், ஜெமினிகணேசன், சரோஜாதேவி, வாணிஸ்ரீ மற்றும் பலர் நடிப்பில் 1968ல் வெளிவந்த திரைப்படம் 'தாமரை நெஞ்சம்'. அப்படம் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், ஆகிய மொழிகளில் பின்னர் ரீமேக் செய்யப்பட்டது. அதன்பின் பாலசந்தர் இயக்கத்தில் சரோஜாதேவி எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.
ஒரு முறை பாலசந்தர் மலேசியா சென்றிருந்த போது, அங்குள்ள ஒரு கடையில் பாலசந்தரை தற்செயலாக சந்தித்த சரோஜா தேவி, உங்கள் படங்களில் எல்லா நடிகர்களும் நான்கைந்து படங்களில் நடித்திருக்கிறார்கள். ஆனால், என்னை மட்டும் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடிக்க வைத்தீர்கள். பின்னர் நடிக்க அழைக்கவேயில்லை என்று வருத்தப்பட்டிருக்கிறார்.
அதற்கு பாலசந்தர், நீங்கள் நடித்த 'தாமரை நெஞ்சம்' ஒரு படமே அந்த நான்கைந்து படங்களுக்கு சமமானது என்று பாராட்டியுள்ளார். அந்த உரையாடல் குறித்து பாலசந்தரிடம் உதவியாளராக இருந்த மோகன், தற்போது சரோஜாதேவியின் மறைவு அஞ்சலியில் பகிர்ந்துள்ளார்.