திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
நந்தா, பிதாமகன் படங்களைத் தொடர்ந்து 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாலா இயக்கும் தனது 41 ஆவது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டியும், தங்கையாக மலையாள நடிகை மமிதா பைஜுவும் நடிக்க, ஜிவி .பிரகாஷ் இசையமைக்கிறார்.
2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடந்த வரும் நிலையில் அடுத்து மதுரை, கோவாவில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளார் பாலா. இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யா இரண்டு வேடங்களில் நடிப்பதாகவும் அதில் ஒரு வேடத்தில் காது கேளாத வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியாக நடிப்பதாகவும் செய்தி வெளியாகி உள்ளது. ஆனால் இதுகுறித்து அப்பட வட்டாரத்தில் விசாரித்தபோது, இப்படத்தில் சூர்யா ஒரு வேடத்தில் மட்டுமே நடிப்பதாகவும், இதற்கு முன்பு பாலா இயக்கிய பிதாமகன் படத்தில் விக்ரம் நடித்தது போன்று ஒரு மாறுபட்ட ஹீரோவாக சூர்யா நடித்து வருவதாகவும் கூறுகிறார்கள்.