பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
நந்தா, பிதாமகன் படங்களைத் தொடர்ந்து 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாலா இயக்கும் தனது 41 ஆவது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டியும், தங்கையாக மலையாள நடிகை மமிதா பைஜுவும் நடிக்க, ஜிவி .பிரகாஷ் இசையமைக்கிறார்.
2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடந்த வரும் நிலையில் அடுத்து மதுரை, கோவாவில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளார் பாலா. இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யா இரண்டு வேடங்களில் நடிப்பதாகவும் அதில் ஒரு வேடத்தில் காது கேளாத வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியாக நடிப்பதாகவும் செய்தி வெளியாகி உள்ளது. ஆனால் இதுகுறித்து அப்பட வட்டாரத்தில் விசாரித்தபோது, இப்படத்தில் சூர்யா ஒரு வேடத்தில் மட்டுமே நடிப்பதாகவும், இதற்கு முன்பு பாலா இயக்கிய பிதாமகன் படத்தில் விக்ரம் நடித்தது போன்று ஒரு மாறுபட்ட ஹீரோவாக சூர்யா நடித்து வருவதாகவும் கூறுகிறார்கள்.