டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்த 'ஆர்ஆர்ஆர்' படம் கடந்த வாரம் மார்ச் 25ம் தேதி வெளிவந்தது. எதிர்பார்த்ததைப் போலவே இந்தப் படம் முதல் நாளிலிருநதே நல்ல வசூலைப் பெற்றது. முதல் வார இறுதி முடிவில் உலக அளவில் இப்படம் 500 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கில் தயாரான இந்தப் படம் தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. ஐந்து மொழிகளிலும் படத்திற்கான வரவேற்பு சிறப்பாக இருப்பதாக அந்தந்த திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொரானோ அச்சம் முழுமையாக விலகாத சூழ்நிலையிலும் இந்தப் படத்திற்கு மக்களிடம் கிடைத்துள்ள வரவேற்பு திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தெலுங்குத் திரையுலகில் அடுத்தடுத்து மூன்று 500 கோடி படங்களைக் கொடுத்து ஹாட்ரிக் அடித்துள்ளார் ராஜமௌலி. இதற்கு முன்பு அவரது இயக்கத்தில் வெளிவந்த 'பாகுபலி 1' படத்தின் மொத்த வசூல் 700 கோடியாகவும், 'பாகுபலி 2' படத்தின் வசூல் 1800 கோடியாகவும் இருந்தது. இப்போது 'ஆர்ஆர்ஆர்' 500 கோடி வசூலை மூன்றே நாட்களில் கடந்துள்ள நிலையில் 'பாகுபலி 2' வசூலை முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.




