Advertisement

சிறப்புச்செய்திகள்

படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் | சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர் | சீக்கிரமே அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன் - ராஜலெட்சுமி பேட்டி | 160 படங்களைக் கடந்த 2024 ரிலீஸ், 6 படங்கள் மட்டுமே 100 கோடி வசூல் | வித்தியாசமா கூவுறாங்க! மணிமேகலை வெளியிட்ட நறுக் வீடியோ | சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

மீரா மிதுனால் ஏமாற்றப்பட்ட லாவண்யா! தனது திறமையால் நடிகையான கதை

26 மார், 2022 - 05:35 IST
எழுத்தின் அளவு:
Lavanya-cheated-by-Meera-Mithun

விஜய் டிவியில் மிக விரைவில் ஒளிபரப்பாகவுள்ள தொடர் சிப்பிக்குள் முத்து. இந்த தொடரின் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஹீரோயினாக பிரபல மாடல் அழகி லாவண்யா அறிமுகமாகிறார். இவர் மாடலாக இருந்த போது, சர்ச்சை நாயகியாக வலம் வரும் மீரா மிதுனால் ஏமாற்றப்பட்டார் என்ற தகவல் தற்போது இணையத்தில் உலா வருகிறது.

மாடலிங் துறையில் ஆர்வமுள்ள பெண்களை மீரா மிதுன் பல மாடல் ஷோக்களில் அறிமுகம் செய்து வைப்பதாக கூறி ஏமாற்றியதாக பலரும் புகார் தெரிவித்திருந்தனர். அந்த வகையில் மிஸ் சவுத் இந்தியா நிகழ்ச்சிக்கு அழைத்து செல்வதாக மீரா மிதுன் சிலரை ஏமாற்றியிருந்தார். அதில் ஒரு மாடல் அழகி தான் லாவண்யா. அவர் தற்போது சீரியலில் கமிட்டாகியிருப்பதால் அவரை பற்றி தகவல்களை துளாவிய நெட்டீசன்கள் இந்த செய்தியை இணையத்தில் பரப்பி வருகின்றனர்.


லாவண்யா அந்த ஒரு முறை ஏமாந்திருந்தாலும், தனது திறமையால் குயின் ஆஃப் மெட்ராஸ் 2019 மற்றும் மிஸ் தமிழ்நாடு 2020 ரன்னர், மிஸ் போட்டோஜெனிக் - மிஸ் சவுத் இந்தியா ஆகிய விருதுகளை வென்றுள்ளார். இதன்மூலம் ஜீ தமிழின் சூப்பர் குயின் நிகழ்ச்சியின் வாய்ப்பு கிடைக்கவே சின்னத்திரையில் நுழைந்த லாவண்யா தற்போது விஜய் டிவியில் நடிகையாக அடியெடுத்து வைத்துள்ளார். இப்போதே அவருக்கு ரசிகர் பட்டாளம் சேர்ந்து வரும் நிலையில், மிக விரைவில் முன்னணி நடிகையாகவும் ஜொலிப்பார் என்று அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சிங்கராக மாறிய சீரியல் நடிகைசிங்கராக மாறிய சீரியல் நடிகை ஆபாசமாக பேசிய நெட்டீசனுக்கு கொட்டு வைத்த வீஜே பார்வதி ஆபாசமாக பேசிய நெட்டீசனுக்கு கொட்டு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)