பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றிபெற்ற தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பூச்சி முருகன், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் நேற்று முதல்வரை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
பின்னர் தலைவர் நாசர் நிருபர்களிடம் கூறியதாவது: நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நாங்கள் சங்கத்தின் மரபுபடி முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றோம். எங்களின் பிரச்னைகளை அக்கறையோடு கேட்டறிந்த முதல்வர், அரசு தரப்பில் என்னென்ன உதவிகள் செய்து தர முடியுமோ, அதை செய்து தருவதாகவும் தெரிவித்தார். என்றார் நாசர்.
பின்னர் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த செயற்குழுவில் புதிய நிர்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனர். அதன்பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த பொதுச்செயலாளர் விஷால் கூறியதாவது: நடிகர் சங்கம் வழக்குளை சந்திக்காமல் தேர்தல் நடந்த அன்றே நாங்கள் மீண்டும் பொறுப்புக்கு வந்திருந்தால் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்ககப்பட்டிருக்கும். ஏற்கெனவே 60 சதவிகித பணிகள் முடிந்துள்ளது. மீதமுள்ள பணிகளை முடிக்க 21 கோடி தேவை. முதல்வரிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். உதவுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. நடிகர் சங்க கட்டிடத்தை கட்டிமுடிப்பதே எங்களின் முதல் பணியாக இருக்கும். என்றார்.