டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

நடிகர் தனுஷை பிரிவதாக அறிவித்த பிறகு பயணி என்ற ஒரு வீடியோ ஆல்பத்தை இயக்கினார் ஐஸ்வர்யா ரஜினி. இந்த நிலையில் தற்போது அவர் தனது மகன்களான லிங்கா, யாத்ரா ஆகிய இருவரும் தனக்கு அன்பு முத்தம் கொடுக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
அதோடு, நேற்று உலக கவிதை நாள் என்பதால் ஒரு கவிதையும் வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா. அதில், ‛‛என் வயிற்றில் இருக்கும்போது என்னை உதைத்தாய்... இப்போது நீங்கள் இருவரும் வளர்ந்து என்னை முத்தமிடுவதை ரசிக்கிறேன். அன்பான ஆத்மாக்களை மகன்களாக பெற்றதற்கு கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். உங்களுக்கு திருப்பி செலுத்த என்னிடம் இருப்பது பிரார்த்தனை ஒன்று மட்டுமே. உங்களது ஒவ்வொரு வளர்ச்சிகளையும் பொக்கிஷமாக பார்ப்பேன்'' என தெரிவித்துள்ளார்.




